யாழில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!
மூளை காய்ச்சல் காரணமாக யாழில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊறணி பகுதியைச் சோ்ந்த 4 வயதான அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற 4 வயது சிறுமியே நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்துச் சுகயீனமடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந் நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.