மஹிந்தவிற்கு வைத்தியம் பார்த்த பிரபல வைத்தியரின் உயிரை பறித்த கொரோனா!
உலக பிரசித்திதிபெற்ற மூலிகை மருத்துவர் எலியந்த வைட் கொரோன வைரஸ் தொற்றினால் சற்று முன்னர் (22) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, லசித் மாலிங்க, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு பண்டைய கால மருத்துவ முறைகள் மூலம் நோய்களையும் உபாதைகளையும் குணப்படுத்தியவர் ஆவார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வார காலம் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டவேளையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
My foot injury in 2008 ... was actually a miraculously healed injury.
— Lasith Malinga (@ninety9sl) September 22, 2021
Thanks to you I was able to go to greater heights in my career and for that, I am forever grateful.
May you attain the supreme bliss of Nibbana
-Mali- pic.twitter.com/LSVYEjEk7Q
இந்நிலையில் எலியந்த வைட்க்கு இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள் நட்சத்திர வீரர் லிசித் மாலிங்க டீவிட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.