உயிரிழந்த நெந்துன்கமுவே ராஜா தேசிய பொக்கிஷமாக பிரகடனம்!
உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
யானையின் சடலத்தை எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக பாதுகாக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை இன்று காலை உயிரிழந்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ´நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த நெந்துன்கமுவே ராஜா ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
தென்னிலங்கையரை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்