இறந்து மிதக்கும் மீன்கள் விற்பனை செய்வோரிற்கு எச்சரிக்கை!
முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் கடும் வெயிலால் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றது.
அவற்றை மல்லாவி மக்கள் பலர் சேகரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
எனவே அந்த மீன்களை விற்பனை செய்வதனை பொலிஸார் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மல்லாவி குளத்தில் மீன் விற்பனை செய்பவர்களை கைது செய்ய பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதற்கட்டமாக அதிக சூரிய ஒளியினால் மீன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாப்பிட வேண்டாம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இறந்த மீன்களின் மாதிரிகளை எடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கும் வரை மல்லாவி ஏரியின் மீன்களை சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் முல்லைத்தீவு விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள், ஏரிகளின் நீர் மட்டம் தொடர்பில் மீன்பிடி விரிவாக்க உத்தியோகத்தர்கள் அக்கறை காட்டாது இலட்சக்கணக்கான மீன்களை ஏரிகளில் விடுவதால் இலட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிவதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் மீன்கள் இறந்து கிடப்பதால் மல்லாவி குளத்தை சுற்றியுள்ள பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.