தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்... ஹோட்டல் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் சடலமாக மீட்கபட்ட நபர்!
களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குப் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட முதியவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கபில நிற சட்டையை அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.