தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்; சிக்கலில் பிரபல யூடியூபர் !
பிரபல தமிழ் யூடியூப் சேனல் நடத்துபவரின் குடும்பத்திற்கு சொந்தமான படகில் இருந்து இலங்கைக்கு கடந்தப்படவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு, படகு மூலம் கஞ்சா கடத்தவுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத் துறை உதவி ஆணையர் 15 பேர் கொண்ட குழு, நேற்றிரவு கடலோர பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது.
இதன்போது நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி வந்தபோது, சிலர் படகு ஒன்றில் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற அதிகாரிகளை பார்த்ததும், அவர்கள் மூட்டைகள், 4 இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த மூட்டைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அ சுமார் 280 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, பிரபல ‘நாகை மீனவன்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவரின் குடும்பத்திற்கு சொந்தமான படகு என கூறப்பட்சுகின்றது.
அத்துடன் குறித்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், விசாரணையை முடுக்கிவிட்டுள்ள பொலிசார், கஞ்சாவை கடத்த முயன்றது யார், இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
2இதேவேளை கடல் உணவுகள், கடல்சார் மீனவர்கள் வாழ்வு உள்ளிட்டவைகள் குறித்து யூ டியூபில் வீடியோ பகிர்ந்து வரும் நாகை மீனவன் யூ டியூப் சேனலை சுமார் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.