வடமாகாணத்தில் மீண்டும் தீவிரமடையும் ஆபத்து!
இலங்கையின் வடமாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வடக்கில் 32 பேர் உட்பட, யாழ். மாவட்டத்தில் 15 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (17) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேருக்கும், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
மேலும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேருக்கும், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவருக்கும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேருக்கும், பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது,
மேலும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 03 பேருக்கும், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.