வவுனியாவில் நாசமான பயன்தரு மரங்கள்! செய்கையாளர்கள் கவலை (Photos)
வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 1,700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று(20) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
1,700க்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள்
இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1,700க்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, கத்தரி உள்ளிட்ட பயன்தரு மரங்களும் புகையிலை செடிகளும் அழிவடைந்துள்ளன.
இந்நிலையில் தமது வாழ்வாதரமாக மேற்கொண்ட பயிர்கள் அழிவடைந்தமை காரணமாக செய்கையாளர்கள் பெருதும் கவலை கொண்டுள்ளனர்.