பயணிகளின் உயிரை காத்து உயிர் விட்ட சாரதி
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் இளம் சாரதி நேற்று புதன்கிழமை (16) இரவு 7:30 மணியளவில் திடீர் மரணம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சாரதி 39 வயதுடைய கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கபப்டுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாரதிக்கு திடீர் சுகயினம்
குறித்த பஸ் நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணிக்கும் போது நுவரெலியா - தலவாக்கலைக்கு செல்லும் வழியில் மட்டுக்கலை சந்தியில் பஸ்ஸின் டயரில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு பஸ் பயணித்த போது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயினம் காரணமாக அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.