மட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் சிறுமி வாழ்ந்து வருகின்றார். இந் சம்பவதினமான நேற்று சிறுமி தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமி தயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.