திருகோணமலையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த முதலை!
திருகோணமலையில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் புகுந்த முதலை திருகோணமலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இவ்வாறு முதலை ஒன்று புகுந்துள்ளது.
குறித்த முதலை இன்று காலை (28) திருகோணமலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் பிடிக்கபட்டுள்ளது.
குறித்த முதலை இன்று காலை பொலிஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளங்காணப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் தகவல் வழங்கப்பட்டது.
தவலறித்து ஸ்தலத்துக்கு விரைந்து வ்ந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் குறித்த முதலை, மீட்கப்பட்டு மீண்டும் நீர் நிலையொன்றில் விடுவிக்கப்பட்டது.
இதேவேளை, அருகில் உள்ள ஏரியிலிருந்து உணவு தேடி குறித்த முதலை பொலிஸ் பைலையத்திற்குள் வந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.