புதிய கூட்டணிகளால் பசிலுக்கு நெருக்கடி!
புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளமை தேர்தலில் சவாலாக அமையும். எனினும், சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை எமது கட்சிக்கு உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டி, தலதாமாளிகைக்கு யணம் மேற்கொண்ட பஸில் ராஜபக்ச, அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்கும் நோக்கிலேயே தலதாமாளிகையில் அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகின்றது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ச, ” 252 சபைகளுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
யாழில் வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம். மட்டக்களப்பில் கப்பல் சின்னம். அதேபோல குதிரையும் களமிறங்குகின்றோம்.
தேர்தல் முடிவு எவ்வாறு அமையுமென கூறமுடியாது. அது மக்களின் கையில்தான் உள்ளது என தெரிவித்தார்.