கிளிநொச்சி பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்!
'பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும்' என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி பொலிஸார் சிறப்பான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் கூடைகளை பொருத்தமான இடங்களை இனம் கண்டு கிளிநொச்சி பொலிஸார் வைத்து வருகின்றனர்.
குமரபுரம் 6 ஆம் வீதி கலைச்செல்வி மோகனபவனின் நினைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பொலிஸாருக்கு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் கூடைகளை வழங்கியுள்ளார்.
இந்த பொருட்களை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிடம் வழங்கும் நிகழ்வில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்தது சில்வா, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.