அர்ச்சுனா எம்.பி இன் பதவி தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால், அர்ச்சுனாவின் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம் (26) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
பதவியில் இருந்து விலக சிந்திப்பு
இதன்போதே, குறித்த வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் யாழ். செம்மணியில் இடம்பெற்ற அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிம்மதியாக இருப்பது குறித்து சிந்தித்து வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.