முஜிபுர் ரகுமானுக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பதிவிட்டவர்களுக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராக இணையத்தில் தவறான கருத்துக்களைப் பதிவிட்டவர்களுக்கு, நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது
இதன்படி, ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் சார்லஸ் உட்பட்ட பலருக்கு எதிராக, கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி இன்று நிபந்தனைக்குட்பட்ட தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் அனைத்து பிரதிவாதிகளும் ஜூன் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.