தமிழர்களுக்கு தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது
இலங்கையில் பல்லாண்டு காலமாகத் நீடிக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண முனைந்தால் அதற்கு நான் முழுமையான ஆதரவு வழங்குவேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு தீர்வுக்கான பேச்சை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தால் அந்தப் பேச்சு தோல்வியில்தான் முடிவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது என தெரிவித்த சந்திரிக்கா, சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.