கழுதைப் புலிகளையும் விட்டுவைக்காத கொரோனா!
அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே கழுதைப்புலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் கொரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளது.
குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள 22 வயதான கோஸி, 23 வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
டென்வர் உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகளுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கழுதைப்புலிகள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டன.
இதெவேளை இதுவரை டென்வர் உயிரியில் பூங்காவில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ,
“கழுதைப் புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடினமானது. அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை கழுதைப்புலிகள், ஆந்த்ராக்ஸ், ரேபிஸ், போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களையும் தாங்கி உயிர்வாழக்கூடியவை கழுதைப்புலிகள். அவைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வியப்புக்குரியது, மற்றவகையில் கழுதைப்புலிகள் ஆரோக்கியமாக இருக்கின்றதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் விலங்ககுளுக்கும் பரவுவது குறித்து அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் , அறிவியல் உலகிற்கு கிடைத்துள்ள தகவலின்படி, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவது குறைவாகும்.
அதேசமயம், கொரோனாவில் பாதி்க்கப்பட்ட மனிதர்கள் விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மனிதர்கள்மூலம் விலங்குகளிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக அமெரிக்க வேளாண் மற்றும் கால்நடைத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.