இலங்கையில் மேலுமொரு மருத்துவரை பலியெடுத்த கொரோனா!
இலங்கையில் மேலுமொரு மருத்துவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் பணியாற்றிய கட்டுகஸ்தோட்ட, மாவில்மட பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஜைத் ரஃபைதீன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், ஓகஸ்ட் 18 அன்று பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.