ஜனவரியில் கொரோனா தீவிரமாகும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மக்கள் பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையுடன் செயற்படாவிட்டால் வரும் ஜனவரி மாதத்திற்குள் கொரோனா தீவிரமாக பரவும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் கூறுகையில்,
புத்தாண்டு காலத்தை அடுத்து, கவனக்குறைவான பொது நடத்தை காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதோடு பண்டிகைக் காலங்களில் கொரோனா வைரஸை பொதுமக்கள் அலட்சியப்படுத்தினால் அது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்றார். அதேவேளை பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதுடன் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நைஜீரியாவில் இருந்து திரும்பிய பிறகு ஒரு உள்ளூர்வாசி ஓமைக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததை போலவே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூலம் எந்தவொரு புதிய வகையும் நாட்டிற்குள் நுழைகிறதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்குள் நுழையும் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், சோதனை நேர்மறையானதாக இருந்தால், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுகாதார அமைச்சகம் மரபணு வரிசைமுறையை நடத்த போதுமான ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நாட்டிற்குள் நுழையும் மாறுபாடுகளைக் கண்டறிவதற்கான வசதிகள் அந்தந்த இடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.