கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கொரோனா
கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டாவளை- கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த மாணவியொருவர் வெளிமாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்று வருகின்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடு திரும்பிய அவர், வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் மாணவிக்கும் வீட்டாருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வெளியாகிய அவர்களின் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில், 5பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.