இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கு கொரோனா!
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்று 2021 போட்டியில் பங்கேற்ற தேசிய மகளிர் அணியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் மற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிம்பாப்வேயில் இருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்திய கொரோனா மாறுபாட்டின் காரணமாக ஜிம்பாப்வேயில் தகுதிச் சுற்று போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தது.
மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.