அச்சுறுத்தும் கொரோனா ; 1500 மாணவர்களை விடுதிகளில் அடைத்த சீனா!
சீனாவின் க்ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள டலியான் நகரில் உள்ள ஷீவாங்கே பல்கலைக்கழக நகரில் இருப்போரே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொடிய கொரோனா வைரஸானது முதன் முதலில் சீனாவில் தான் கண்டரியப்பட்டது. அதன்பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அதன்பின்னர் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது.
இதேவேளை தற்போது டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் இருக்கும் ஏராளமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து , குறித்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை தனிமைப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஓட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு காணொளி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.