யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள Cordelia Cruises!
இந்தியாவிலிருந்து பயணிக்கின்ற அதிசொகுசு சுற்றுலா கப்பலான Cordelia Cruises எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 2023ஆம் ஆண்டில் 9 முறையும் 2024ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறையும் இலங்கைக்கு வந்துள்ளது.
அதனையடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான பயணமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த கப்பல் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா கப்பல், காலை வேளையில் காங்கேசன் துறைமுகத்திற்கு வருகைதரும். இதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள், யாழ்ப்பாணம், கோட்டை உள்ளிட்ட முக்கியமான இடங்களை பார்வையிட்டு, அதன் பின்னர் மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளனர்.
Cordelia Cruises கப்பல் மிகவும் பிரமாண்டமான மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட சுற்றுலாப் பயணிகள் கப்பலாக காணப்படுகிறது