பிரபாகரன் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனகூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை எனவும் தெரிவித்தார்.
அதோடு , தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி பாராளுமன்றத்துக்கு வந்ததாகவும், எனினும் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
அதோடு நாட்டை கைவிட்டு வெளிநாடுக்கு சென்றவரே அன்டன் பாலசிங்கம். அவர் இங்கிலாந்தில் ஒரு தாதியரையே திருமணம் செய்திருந்தார். பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது தனக்கு சந்தேகமே எனவும் அவர் கூறினார்.
பாலசிங்கம் போன்று வெளிநாடுகளில் இருந்தவர்களுக்கு நாட்டில் இனப் பிரச்சினை ஒன்று இருந்தது பயனாக இருந்ததாகவும் கூறிய சரத் பொன்சேகா ,இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டங்களை தூண்டியதாகவும் கூறினார்.