செம்மணி புதைகுழியில் இடம்பெறும் சூழ்ச்சி ; சாணக்கியன் சூளுரை
யாழ்ப்பாணம் செம்மணி புதைக்குழியில் நடைபெறும் விடயங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அங்கு கட்டாயமாக CCTV பொருத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று (30) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில்,
33 பேரின் எச்சங்கள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அதனை பாதுகாப்பதற்கு கூடாரங்களோ அல்லது பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
மழை பெய்யுமானால் அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும். டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்படும் போது சில கஷ்டங்கள் ஏற்படும். எனவே, இவை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இதில் பெரியளவில் சந்தேகங்கள் ஏற்படுதற்கான காரணம் நேற்றைய தினம் புத்தக பையொன்று கண்டுபிடிக்கப்பட்டவேளையில் அதனை அங்கிருந்து அகற்றுமாறு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்கு உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களும் கிடைத்தன.
ஆனால் அங்கிருந்த ஊடக நண்பர் ஒருவர் அதனை உடனடியாக புகைப்படம் எடுத்ததன் காரணத்தினால் அது வெளிவந்திருக்கின்றது. இந்த விடயங்களை மூடிமறைக்க அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரின் முழு உரையையும் இந்த காணொளியில் முழுமையாக காணலாம்....