வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான நேற்றைய தினம் (10) மாலை ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்த பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார் .
கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு, காலை ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்களால் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

மகா சங்காபிஷேகத்தைக் கண்டு தரிசிப்பதற்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூர் முன்றலில் திரண்டு கந்தனை வழிப்பட்டனர்.
தொடர்ந்து மாலை வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.