பொரளை தேவாயத்திற்குள் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் சதி முயற்சிகள்
பொரளை தேவாலயத்திற்குள் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் சதிமுயற்சிகள் இடம்பெற்றுள்ளன என குற்றம்சாட்டி பொலிஸ் தலைமையகத்தில் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சிராந்த அமரசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.
இதன் பின்னால் ஒரு பெரிய நாடகம் உள்ளது பெலன்வில தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் மறக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொரளையில் கைக்குண்டு மீட்கப்பட்டமைக்கும் பெலன்விலவில் கைக்குண்டு மீட்கப்பட்டமைக்கும் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சதி முயற்சி 2021 செப்டம்பர் 13ம் திகதி ஆரம்பமானது நாட்டின் மீது எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ந செய்தியுடன் இது ஆரம்பமானது மறுநாள் நாரஹ ன்பிட்டி மருத்துவமனையில் கைக்குண்டு மீட்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் பெலன்விலவில் கைக்குண்டு மீட்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.