தமிழினப்படுகொலை தொடர்பில் பிரதமர் மஹிந்த கூறியது
இனப்படுகொலையை நிகழ்த்த படையினர் செல்லவில்லை, மாறாக வடக்கிலுள்ள அப்பாவி மக்களை பணயமாக வைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போர் செய்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போர் வெற்றியை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். எந்த வகையிலும் எதிர்ப்புக்கள் வந்தாலும் இலங்கைப் படையினரை காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் , முதலாவதும் எனது தாய்நாடே, இரண்டாவதும் எனது தாய்நாடே, மூன்றாவதும் எனது தாய்நாடே என கூறி பிரதமர் மஹிந்த தனது உரையை முடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.