3000 இற்கும் அதிகமான உணவகங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை! பொதுமக்களின் நிலை
புறக்கோட்டையில் சிறு வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 3,000 இற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு மற்றும் பால்மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் மாத்திரம், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட ஏனைய உணவு விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமை எரிபொருள், பால்மா ஆகியவற்றுடன் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், திறக்கப்பட்டுள்ள சில சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு கோப்பை பால் தேநீர் 85 ரூபாவரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ்வாறான நடவடிக்கையாலும், சமையல் எரிவாயு மற்றும் பால்மா தட்டுப்பாடு காரணமாகவும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.