கொழும்பு இரவு விடுதி மோதல் விவகாரம் ; யோஷிதவுக்கு தொடர்பா?
யோஷித ராஜபக்ச, வெள்ளிக்கிழமை (21) இரவு கொழும்பு பார்க் தெருவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொம்பனித் தீவு பொலிஸார் விசாரணைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம்
வெள்ளிக்கிழமை இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வாக்குவாதம் சிசிரிவி கேமராக்களில் பதிவாகியிருந்த நிலையில் மெய்பாதுகாவலர் ஒருவர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
இரவு விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டைகளை அணிவது கட்டாயம் என்று மெய்காவலர் தெரிவித்ததை அடுத்து, இரவு விடுதியின் மெய்காவலர்களுக்கும் யோஷித ராஜபக்ஷவுடன் வந்த குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.