மீகொடை துயரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் பலி
மீகொடை, ஹைலெவல் வீதியில் தானசாலை அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
உயிரிழந்தவர்களில், பி.பி.இந்திராணி (56 வயது) – பிலியந்தலை, நவிஷா நிலக்ஷி (35 வயது) – இந்திராணியின் மகள்.லசிக பிரியங்கர நாணயக்கார (38 வயது) – இந்திராணியின் மருமகன் (மகளின் கணவர்).
15 வயது சிறுமி – உயிரிழந்த இந்திராணியின் சகோதரரின் மகள் (உறவினர் முறை தங்கை) ஆகியோர் உயிரிழந்தனர்.
அவிசாவளைப் பகுதியில் வசித்து வந்த நவிஷா மற்றும் அவரது கணவர் லசிக ஆகியோர், கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள தங்களது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
மீண்டும் அவிசாவளையில் உள்ள வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் கொண்டு போய் விடுவதற்காக இந்திராணியும் அவரது கணவரும் புறப்பட்டுள்ளனர்.
அவிசாவளை நோக்கிச் செல்லும் வழியில் வீதியோரத்தில் காணப்பட்ட 'ரொட்டித் தானசாலை' ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டி வந்த இந்திராணியின் கணவர் (நவிஷாவின் தந்தை) மற்றும் நவிஷாவின் மூத்த பிள்ளை ஆகிய இருவரும் முச்சக்கரவண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.