காலநிலை மாற்றத்தினால் நீடிக்கப்படும் அபாய எச்சரிக்கை!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிகரித்த மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு விநாடியில் மூவாயிரம் கனஅடி அளவான நீர் விக்டோரியா நீர்தேக்கத்துக்கு விடுவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தினை அண்டி வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 12.30 வரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.