குருநாகலில் மதுபோதையில் நடந்த கொடூர சம்பவம்: 4 பேர் வெட்டிப் படுகொலை!
குருநாகல் பகுதியில் மதுபோதையில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (14-02-2023) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் 22, 25, 35, 41 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களில் 25 வயதுடைய இளைஞர் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்தார் எனவும், அவரின் வீட்டிலேயே நண்பர்கள் சம்பவ் தினத்தன்று இரவு ஒன்றுகூடி மதுபானம் அருந்தியுள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, முன்பகை கொண்ட இரு தரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த மோதல், இறுதியில் வாள்வெட்டில் நிறைவடைந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் 8 பேரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.