ஜனாதிபதி கோட்டாபய விடுத்த கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி!
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய கிறிஸ்மஸ் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் போதனையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதல் நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக இந்த வருட பண்டிகையை, சுகாதாரப் பரிந்துரைகளுக்கு ஏற்ப கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு வருட காலமாக, தனிப்பட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு நாடு என்ற வகையில் ஒவ்வொருவரினதும் மதங்களினால் போதிக்கப்பட்ட ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் ஒழுக்கம் என்பன தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.