இலங்கை பொலிஸாரிடம் இரவில் சிக்கிய சீன யுவதி ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொடுண்டா கார்டன் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட யுவதி
இதன்போது சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 100 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீன நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.