கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய சீனாவின் சர்ச்சை கப்பல்!
சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை குறித்த Hippo Spirit என்ற கப்பல் இலங்கையின் மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடற்படை உறுதி செய்திருந்தது.
குறித்த கப்பலில் உள்ள சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக இரு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை அரசு, உரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.