400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்களுடன் வந்த சீன விமானம்
சீனா அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (08) காலை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 84,525 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீனா அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சீனா அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.