ஜனாதிபதி ரணிலின் நம்பிக்கை வீண்போகவில்லை; இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ள சீனா, எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இந்நிலையில் 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.