இலங்கையின் தற்போதைய கையறு நிலைக்கு சீனாவே காரணம்; பகிரங்கமாக கூறிய நாடு!
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கையின் வரலாற்றில் வரலாறு காணாத இந்த பொருளாதார நெருக்கடியானது சீனாவின் பட்டுப்பாதை திட்டம் (BRI) உருவாக்கிய கடன் பொறியின் விளைவே என தைவான் தைவான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Joanne Ou பகிரங்கமாக சுட்டிக்காட்டினார்.
பட்டுப்பாதை திட்டம் திட்டம் என்பது 2013 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தால், ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரையிலான பிராந்தியங்களில் கிட்டத்தட்ட 70 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் முதலீடு செய்ய உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு உத்தி ஆகும்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ள 60 தைவான் பிரஜைகள் பாதுகாப்பாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள தைவான் வெளிவிவகார அமைச்சு, அவர்கள் தாய்வான் பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
அத்துடன் , உதவிக்காக தாய்லாந்தில் உள்ள அமைச்சு அல்லது அதன் பிரதிநிதி அலுவலகத்திற்கு மக்கள் வரலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு முக்கிய புலனாய்வு சேவைகளான FBI மற்றும் M15 ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று (06) பிரித்தானியாவில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்.
இதன்போது , தைவானை பலவந்தமாக சீனா கைப்பற்றினால், வரலாற்றில் மிகவும் அது பயங்கரமானது என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.