உக்ரைன் போரை மாதிரியாக வைத்து சீனா போட்ட பிளான்!
ரஷ்ய-உக்ரைன் போரை முன்மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவைத் தாக்க சீனா திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடர்ந்து பல ஆண்டு காலமாக தனது அண்டை நாடான தைவானை தன்வசமாக்க முயன்று வருகிறது.
சிறிய தீவு நாடான தைவானில் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் பிரதமர் சாய் இங் வென் பல ஆண்டுகாலமாக தைவானை சுற்றி அச்சுறுத்தல் ஈடுபடும் சீன கடற்படை மற்றும் விமானப் படைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
தொழில்நுட்ப உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகித்துவரும் தைவான், சீனாவிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிரபல நாடுகளின் உதவியை நாடி வருகிறது.
அதேசமயம் அமெரிக்காவுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள தைவான், சீனாவுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களில் ஒன்றான சீன ராணுவம், தைவான்மீது ஏவுகணை தாக்குதல் நடத்த அதிக நேரம் ஆகாது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு தனது 5 அம்சங்கள் கொண்ட தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங் மற்றும் , தைவானை கைப்பற்ற சீனா தீவிர முயற்சி மேற்கொண்டது.
எனினும் சீனாவின் எந்த முயற்சியும் இதுவரை பலிக்கவில்லை. இந்நிலையில் சீனாவின் நட்பு நாடான ரஷ்யா, தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ளது. சிறிய நாடான உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து தன்னை தற்காத்துக்கொள்ள கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த போரில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சீனா உக்ரைன்-ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கருத்து தெரிவித்த தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ, தற்போது உலக நாட்டு அதிபர்களின் கவனம் உக்ரைன்மீது உள்ள நிலையில் யாரும் எதிர்பாரா வகையில் சீன ஜி ஜின் பிங் அரசு தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒருவேளை ரஷ்யா உக்ரைனை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கைப்பற்றிவிட்டால் அடுத்து சீனா தைவான் மீது ரஷ்யா போல ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயம் ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆயுதமேந்தி படையெடுத்து வந்தபோது அஷ்ரப் கனி அரசு பின்வாங்கியது போன்று உக்ரைனில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அரசு பின்வாங்கவில்லை.
மேலும் தைவான் பிரதமர் சாய் இங் வென், ஜெலன்ஸ்கி போலவே நெஞ்சுரம் கொண்டவர் ஆவார்.
ஒருவேளை சீனா, தைவான் மீது படையெடுத்து வந்தாலும் தன்னால் இயன்றவரை போராடிய தீருவார் என்பதில் சந்தேகமில்லை எனவும் நம்பைக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் ராணுவம் தைவானை கட்டுக்குள் கொண்டுவர அதிக நேரம் பிடிக்காது என்றும் கூறப்படுகின்றது.
ஒருவேளை தைவானை சீனா இவ்வாறு சர்வாதிகாரம் மூலம் ஆக்கிரமித்தால் அது மறைமுகமாக இந்தியாவையும் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.