காண்போரை உருகச்செய்யும் சிம்பன்சியின் கொஞ்சல்: வைரலாகும் காணொளி
சிம்பன்சி குரங்குகள் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் காண்போரை உருகச்செய்துள்ளது.
சிம்பன்சி குரங்குகள் இரண்டு அவற்றின் குட்டியுடன் விளையாடும் காணொளி ஒன்றை இந்திய வனப் பணி அதிகாரியான சுஷாந்தா நந்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு அதிகாரியான சுதா ராமன் குறித்த காணொளியை பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
A family that plays together,
— Susanta Nanda IFS (@susantananda3) November 12, 2021
Stays together? pic.twitter.com/adzvVyqNu0
இந்த காணொளி குறித்து அவர் பதிவிட்டுள்ள தலையங்கத்தில், “ஒன்று சேர்ந்து விளையாடும் ஒரு குடும்பம், சேர்ந்தே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காண்போரை உருகச்செய்யும் இந்த சிம்பன்சி குரங்குகளின் (மனிதகுரங்குகள்) செயல் மூலம், விலங்குகளுக்கும் பாசம் உண்டு, உணர்வுகள் உண்டு என்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சிம்பன்சி குரங்குகளுக்கு தண்ணீரில் நீந்த தெரியாது என்பது குறிப்படத்தக்கது.