இலங்கையில் சிறுவர்களுக்கு சைபர் பாலியல் வன்கொடுமை ; வெளியான அதிர்ச்சி தகவல்
2024/2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் சைபரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார்.
இது கடந்த ஆண்டை விட 50% அதிகரிப்பு என்று ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை
2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்களும், 2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 28 சிறுவர்களும் சைபரின் ஊடாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் குற்றங்களுக்காக 282 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர், 2025 ஆம் ஆண்டில் 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டில் 375 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், சம்பவம் தொடர்பாக 114 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 118 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.