சிலாபம் - கொழும்பு பிரதான வீதி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
நீர்கொழும்பு , சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்று அதே திசையில் பயணித்த பார ஊர்தி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியை செலுத்திய சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
விஅத்து தொடர்பில் பார ஊர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.