லண்டனில் இருந்து திரும்பும் தமிழக முதலமைச்சர் விஜய்
லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாளை காலை சென்னை திரும்புவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த செப்டம்பர் 10-ஆம் திகதி முதலமைச்சர் விஜய் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

உற்சாக வரவேற்பு அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு
இந் நிலையில் தனது லண்டன் பயணத்தின் போது, அங்குள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தனது வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்டம்பர் 17) காலை அவர் சென்னைசர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைகிறார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி வானூர்தி நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.