ஒரு வருடத்தில் 1 லட்சத்திற்கு ஆணுறை வாங்கிய நபர்!
இந்திய மக்களிடியே அன்றாட தேவைகளிலிருந்து உயர்விலை மின்னணு சாதனங்கள் வரை அனைத்தையும் இணையம் வழியாக வாங்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்து, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 செலவு செய்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவொஇப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குண்டூசி முதல் ஐபோன் வரை ஆர்டர்....
இந்தியாவில் ஆன்லைன் தளங்களில் ஆணுறை விற்பனை மிக வேகமாக நடைபெறுகிறது என்றும், சராசரியாக ஒவ்வொரு 127 ஆர்டர்களுக்கும் ஒரு முறை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் இந்த விற்பனை 24 சதவீதம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை உயர்விலை பொருட்கள் வாங்குவதிலும் இந்தியர்கள் தயங்கவில்லை என்பதற்கான சான்றாக, பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 3 ஐபோன்களை ரூ.4.3 லட்சத்துக்கு ஆர்டர் செய்துள்ளார்.

இது இந்த ஆண்டில் ஒரே நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்புள்ள ஆர்டர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் புளூடூத் ஸ்பீக்கர்கள், ரோபோ வாக்யூம் கிளீனர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஒரே ஆர்டரில் ரூ.2.69 லட்சம் மதிப்பில் வாங்கியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஒருவர், சர்க்கரை இல்லாத ரெட்புல் பானத்திற்காக மட்டும் ரூ.16.3 லட்சம் செலவு செய்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல, சென்னையைச் சேர்ந்த ஒருவர் செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் வாங்குவதற்காக ரூ.2.41 லட்சம் செலவிட்டுள்ளார் .
மேலும், பெங்களூருவாசிகள் ஆன்லைன் வர்த்தக தளங்களில் அதிகமாக வாங்குவதுடன், டெலிவரி பணியாளர்களுக்கு தாராளமாக டிப்ஸ் வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல்கள், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியையும், நுகர்வோரின் வாங்கும் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் தெளிவாக காட்டுகின்றன.