ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்! தலைவர் யார்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுசீரமைப்பின் கீழ் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கட்சியின் தலைமை, செயலாளர் பதவி மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
கட்சியின் செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் உரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எடுத்துச் செல்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை கட்சித் தலைமை, செயலாளர் பதவி மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளை மட்டுமே வகித்து வந்த நிலையில், ஏனைய பதவிகளையும் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.