மின்சார கட்டணம் மீண்டும் மாற வாய்ப்பு! அமைச்சர் வெளியிட்ட தகவல்
மின்சார கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (16-02-2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் கஞ்சன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தின் பிரகாரம் ஆண்டிற்கு இரண்டு தடவைகள், ஜனவரியில் ஒரு முறை மற்றும் பின்னர் ஜூலை மாதம் என இரண்டு முறை மின்சார கட்டணத்தை மாற்ற முடியும்.
“இந்த காலகட்டத்தில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தேவைகளின் அடிப்படையில் கட்டணங்களை திருத்த வேண்டும் என்றும் நாங்கள் முன்மொழிந்தோம்.
ஜனவரியில் முன்மொழியப்பட்டபடி கட்டணங்களை உயர்த்தியிருந்தால், ஜூலையில் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்து கட்டண திருத்தத்திற்குள் சலுகைகளை வழங்குவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம், ”என்று அவர் விளக்கினார்.
இலங்கையின் எரிசக்தி துறையில் புதிய முதலீட்டாளர்கள் பிரவேசிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு இந்த காலப்பகுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
“ஜூலைக்குள், உண்மை நிலவரத்தை மதிப்பிடலாம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து நிவாரணம் வழங்க முடியுமா என்று பார்க்கலாம்.
ஜூலை மாத நிலவரத்தைப் பொறுத்து, அடுத்த கட்டணத் திருத்தம் அதிகரிக்கப்படாது என்று நான் நம்புகிறேன்..”
அடுத்த கட்டண திருத்தத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.