சம்பிக்க மேற்கொண்ட அடுத்த விஜயம் எங்கு தெரியுமா? வெளியான தகவல்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிளிநொச்சி மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கருத்து முன்வைத்தனர்.
இதனையடுத்து, அதற்கு பதிலளித்த சம்பிக்க, குறித்த பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலமாக தருமாறும், அதற்கு பொருத்தமானவர்களிற்கு தகவலை வழங்கி தீர்வு பெற்று தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மாவட்ட அமைப்பாளர் சீலனின் வேண்டுகோளுக்கு அமைவாக சிவபுரம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி மக்களின் பிரச்சிகைளைகளையும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்துகொண்டார். இதன்போது, வெள்ள அனர்த்தம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள், அவரிடம் முன்வைத்தனர்.
