சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு மத்திய வங்கி பதில்
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஓர் அறிக்கையில் ஏற்கனவே நாணயக் கொள்கையை கடுமை யாக்கியுள்ளது. நாணய மாற்று வீதத்தை நெகிழ்வானதாக இருக்க அனுமதித்தது மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அந்நியச் செலாவணி வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் நெருக்கமான உறவை எதிர்பார்த்து வருவதா கவும், அத்தகைய தலையீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.