துப்பாக்கியை காட்டி கார் உரிமையாளர் செய்த மோசமான செயல்
தலவதுகொட சந்திப்பில், தனது காரை முந்திச் செல்ல விடாமல் தடுத்த மோட்டார் வாகன ஓட்டி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதற்காக காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த 9MM உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்
நுகேகொட, மஹாசென் மாவத்தையிலிருந்து தலவதுகொட நோக்கி பயணித்த மோட்டார் வாகன ஓட்டியின் பின்னால், சந்தேக நபர் பிராடோ ஜீப்பில் பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிராடோ பல சந்தர்ப்பங்களில் மோட்டார் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது, ஆனால் வாய்ப்பு இல்லாததால், அதன் ஓட்டுநர் கோபமடைந்து தலவதுகொட சந்திக்கு அருகில் ஜீப்பை நிறுத்தினார்.
தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி வாகன ஓட்டியை மிரட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகன ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், பிராடோ ஓட்டுநர் துப்பாக்கியுடன் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.